வலைப்பதிவு

சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் அதிகாலை நீராடி சிவசந்நதியில் சிவபூஜை மேற்கொள்ளுவது சிறந்தது,  அவ்வாறு பூஜை மேற்கொண்டு பூஜையைச் செய்து முடிக்க முழயாதவர்கள் கோயிலுக்குச் சென்று அங்கு நடக்கும் பூஜையைக்கண்டு களிக்கலாம்.  அன்று பூராகவும் உபவாசமாக இருந்து வரவேண்டும். பகலில் உறங்கக்கூடாது.  இரவிலும் நான்கு காலங்களிலும் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள வேண்டும்.

தொல்லை யிரும் பிறவிச் சூழுந்தளை நீக்கி
அல்லறுத் தானந்த மாக்கியதே - எல்லை
மருவா நெறியளிக்கும் வாதவூ ரெங்கோன்
திருவாசக மென்னுந் தேன்

திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற திருவாசகம் சைவத் தமிழ் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது.

மாட வீதீயில் உள்ள மக்கள் என்றோ எப்படியே என்றெல்லாம் கூறும் வீதமாக செய்த புண்னியமே திருக்கோயில் மாடவீதியில் இருந்து வாழ்வது "வறுமையில் கேர்மை" என்பார்கள் எண்ணற்ற துன்பங்கள் வறுமையில் இருந்த போதிலும் நேர்மையுடன் இருப்பது சிறப்பு வாய்ந்தது அது போல்நாம் சென்று இறைவனை காண வணங்க தவரானாலும் இறைவன் நம்மை காண வருகின்றார் பகவான் என்னை நோக்கி ஒரு அடி வைத்தால் உன்னை நோக்கி 10அடி வைப்பேன் என்பது போல் திருக்கோயில் சென்று வணங்க முடியாத வர்களுக்கும் கூட இறைவன் தானே வந்து அருள் செய்கின்றார்.

புகைப்படங்கள்

தகவல்கள் அறிய

அருள்மிகு அப்பர் சுவாமி திருகோயில்

திருமயிலை,  ராயப்பேட்டை நெடுஞ்சாலை,

சென்னை.

தொலைப்பேசி : +91 044 2499 6797